சக்தி போற்றுதும்

அறுசீர் விருத்தம்

பாவம் செய்த பக்த ருக்குப்
பாசங் காட்டுவள்
ஜீவன் செய்த குற்றந் தம்மைச்
சீவி மாய்ப்பவள்
யாவ ருக்கும் அருள்கொ டுத்து
யாண்டும் காப்பவள்
தாவி இன்பச் சக்தி யென்னுந்
தாயைப் போற்றுதும் !

காற்று மாகிப் புனலு மாகிக்
கவியு மாகியே
சேற்றில் பூக்கும் கமல மாகிச்
சேலு மாகியே
ஊற்றில் ஊறும் நீரு மாகி
உயிரு மாகியே
மாற்றி உலகை ஆட்டும் சக்தி
மாண்பைப் போற்றுதும் !!

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Jun-15, 2:18 pm)
பார்வை : 87

மேலே