நான் யார்

நான் யார்

சமுதாய சந்தைகளில் விற்கபபட்டவர்களில்
நானும் ஒருவன்
சாதனைக்கனவுகளில்தொலைந்து போனவர்களில்
நானும் ஒருவன்
நிஜத்தில் எரிந்த கற்பனைகளை கொண்டவர்களில்
நானும் ஒருவன்
பூக்களை கொடுத்து முட்களை ப் பரிசாகப்பெற்றவர்களில்
நானும் ஒருவன்
பழி பாவங்களுக்கு அஞ்சி அப்பவியாகிப்போனவர்களில்
நானும் ஒருவன்
புதயலைத் தேடி புதை மணலில் சிக்கியாவர்களில்
நானும் ஒருவன்
இலைகளுக்காக வேர்களை விற்றவர்களில்
நானும் ஒருவன்
வார்தைகளுக்காக வாழ்க்கையை விற்றவர்களில்
நானும் ஒருவன்
பூஜைக்காக கடவுளை விற்றவர்களில்
நானும்ஒருவன்
சுற்றங்களின் சூறாவளியிபல் சுழற்றியடிக்கப்பட்டவர்களில்
நானும் ஒருவன்
இனிப்பாக இருந்து எறும்புகளுக்கு இரையாகிப் போனவர்களில்
நானும் ஒருவன்
கானல் நீரைக் காட்டிய கயவர்களுக்கு இரையாகிப் போனவர்களில்
நானும் ஒருவன்
கடைசியில் நான் யார்?
இன்னும் இருந்துக் கொண்டு
இறந்த காலத்தில் மட்டும் வாழ்ந்த ஒருவன்

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (29-Jun-15, 9:37 am)
Tanglish : naan yaar
பார்வை : 103

மேலே