உனக்காக தேங்கி நிற்கும் கண்ணீர் துளிகள் 555
என்னவளே...
நீ என்னை எதிர்கொள்ளும்
நேரமெல்லாம்...
என் விழிகளில் தேங்கி நிற்கும் க
ண்ணீர் துளிகளை காண்கிறாய்...
நான் சுமந்திருக்கும்
கண்ணீர் துளிகள்...
நீ சொல்லாத வார்த்தைகளுக்கு
செலவழிக்க...
நான் சேமித்து
வைத்திருகிறேனடி...
நீ சொல்லிவிட்டால்
ஆனந்த கண்ணீராகவும்...
சொல்ல மறுத்தால் சுமையான
கண்ணீராகவும் வெளியேறுமடி...
உனக்காக மட்டுமே.....