இதயம் உள்ளோர் சொல்லுங்கள் இனி எப்படி பெண் வாழ்வாள்

சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!

கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .

உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .

தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .

சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்பார்
கண்களால் கற்பழிப்பார் .

சிரித்தால் தாசி என்றும்
முறைத்தால் முறைதவரியவள் என்றும்
பட்டங்கள் பல கொடுப்பார்
இல்லை
படுக்கைக்கு வா என்றழைப்பார் .

கன்னித்திரை உடையவில்லை -எம்
கற்பில் களங்கமில்லை
இருப்பினும் விலைமாதாம்
இது தான் பெண் விதி கேளீர் .

இன்னும் உண்டு எம் வாழ்வில்
எழுதிட தான் வார்த்தை இல்லை
இதயம் உள்ளோர் சொல்லுங்கள்
எப்படி தான் பெண் வாழ்வாள்...??!

எழுதியவர் : கயல்விழி (15-Jul-15, 2:25 pm)
பார்வை : 853

மேலே