செல்லமாய் சின்ன சின்ன கனவுகள்

கலைந்தோடும் மேகத்தால்
கூரை செய்து
வீசிடும் தென்றலால்
ஜன்னலிடு .

பட்டாம்பூச்சிகள்
நிறமெடுத்து
வீட்டுக்கு வர்ணங்கள்
பூசிவிடு .

தூரலின் சாரலில்
தொட்டில் செய்து
மின்னலின் ஒளி பிடித்து
வெளிச்சம் கொடு .

மலர்களின் இதழ்கள்
பறித்தெடுத்து
மெதுமையாய் பதுமைக்கு
மெத்தையிடு.

குளிர்கின்ற நிலவினை பெயர்த்தெடுத்து
வேர்கின்ற பொழுதெல்லாம்
விசிறிவிடு .

குயில்களின் குரலினை எடுத்து
வந்து
கொஞ்சிடும் புது மெட்டு
போட்டுகுடு .

குமரி நான் காணும் கனவிதென்று
இயற்கையின்
செவிகளில் உரைத்துவிடு .!!!

எழுதியவர் : கயல்விழி (26-Jul-15, 4:21 pm)
பார்வை : 799

மேலே