நீ பொழிவாயென

நடுநிசியில்
சுழன்றடித்துக்
கொட்டித் தீர்த்தது மழை !
கதவை இழுத்து மூடி
கட்டிலில் முடங்காமல்
சாளரம் திறந்து
சாரலில் குளிர்ந்து
சத்தமுடன்
சிந்தும் பெயலை ரசித்தேன் ...!
அவ்வப்போது
வெட்டிச் சென்ற மின்னலும்
செவிப்பறையை
அதிரச்செய்த இடியும்
அச்சமூட்டினாலும் .....
அழகே உன்னை
ஆராதிப்பேன் !
வானமுதே
காத்திருப்பேன் என்றென்றும்
நீ பொழிவாயென ....!!