அக்கினிப்பறவை
இறைவா!
விண்ணில் பறந்த ஏவுகணை
மண்ணில் மறைதல் தகுமோ!
அக்கினிப்பறவையொன்று ஆழ்ந்த உறக்கத்தில்,....
குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்ந்"தாய்"
இளைஞர் படையை முன்னின்று நடத்திச்சென்றாய்
கவிதைகள் படைத்தாய் அணுவை பிளந்து அதில் உன்பெயரை இட்டுவைத்தாய்.
பட்டங்கள் பல பெற்றும் -உந்தன்
சிரங்கள் ஒருபோதும் மகுடம் சூட்டிக்கொள்ள விரும்பியதில்லை.
தமிழ்நாடு ஈன்றெடுத்த விஞ்ஞான இலக்கியம்
வானியல் கற்றுத்தந்த வல்லரசுகளின்
வாலிப நாயகன்
விஞ்ஞானம் வியந்த விஞ்ஞானி!...
உலகம் சற்று நிமிர்ந்துதான் பார்த்தது
உந்தன் இரும்புக்கரம் இணைந்த இந்தியாவை.
இந்திய தேசத்தின் முதல்மகனும் நீ
தலைமகனும் நீ.
மூச்சடக்கி நீயுறங்க இதயமற்று
வீற்றிருக்கும் தேசத்திற்கு சுவாசமேது!..
ஈரஞ்சொட்டுகிறதே இளைஞர் விழி
அய்யா! நீயின்றி எப்படி
வல்லரசு கனவு மெய்த்திட!......
மகிதமிழ்