கொஞ்சம் சிரிங்க பாஸ்
எல்லோரும் சிரித்த போது..
எதற்காக சிரிக்கிறோம்
என்பது புரியாமல்..
அவனும் சிரித்தான்..
கொஞ்ச நேரம் கழித்து
புரிந்த பிறகு..
புரிந்து சிரித்தான்..
இன்னும் கொஞ்ச நேரம் கழித்து..
இது கூட நமக்கு புரியவில்லையே ..
முதலிலேயே..
என்று உணர்ந்து சிரித்தான்..
மூன்றாவது தடவையாக!