விநாடிக் கவிதைகள்

8 விநாடிக் கவிதை
..
எழுதுகிறேன்..
படிக்கின்றீர் ..
படித்தபின்..
மறக்க நினைக்கின்றீர்..
..
இப்போது ..
எத்தனை வினாடிகள்
ஆகியுள்ளன ..என்று
பார்க்கிறீர்கள்

*******************
நீ
நான்..
அவர்கள்..
..
அவர்கள்..
நான்..
நீ..
..
எப்படிப் பார்த்தாலும்
மூன்றாம் வரிதான்
குழம்புகிறது
எப்போதும். .!
**********************

ஆசை தீர ..
அனுபவித்தவன் 'சொல்கிறான்..
"ச்சே..இதற்குத்தானா
ஆசைப்பட்டேன்..?"
இப்போது
பேராசைக்காரனாகி விட்டான் ..
வெங்காய விலை போல !
**************************************

அன்பு போதித்த புத்தர்
அமைதியான புத்தர்
தவம் செய்யும் புத்தர்
என்று ..
பல புத்தர்களை
விற்பனையில்
தோற்கடித்தவர் ..
சிரிக்கும் புத்தர் ..
பணம் பெருகுமாம் ..!
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்குமாம்.
****************************************

எழுதியவர் : கருணா (27-Aug-15, 8:04 pm)
பார்வை : 139

மேலே