மழலை மொழி

இதழ் விரிக்கும் 
தாமரைக்கு 
இலக்கியம் தெரியாது 
கதிர் விரிக்கும் 
திசையில் அவள் 
மடல் விரிப்பதெல்லாம் 
கவிதை ! 

கூக்கூ என்று கூவும் 
இளவேனிற் குயிலுக்கு 
இசை தெரியாது 
மலர் தோட்ட தென்றலுக்கு 
அவள் பாடுவதெல்லாம் 
இசை ! 

தத்துப் பித்தென்று 
சொல்லும் மழலைக்கு 
மொழி தெரியாது 
அள்ளி எடுத்து முத்தமிடும் 
அன்னைக்கு அது சொல்வதெல்லாம் 
இனிமை ! 
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-15, 4:24 pm)
பார்வை : 65

மேலே