அன்பின் அதிர்வுகள்

தேகமெல்லாம் நடுநடுங்க
தெருநாயி ஒனப்புடுங்க
நீவந்து ஒளிஞ்சயிடம்
ஏமனசு கரைஞ்சயிடம்

எறும்புக்கு உதவிய
இலைக்கு இணையாக
ஒன நா தூக்கிவந்தேன்
எனக்கு துணையாக..

அன்ப கொதிக்கவிட்டு..
அடியில விறகானோம்.
அனாதைக்கு அனாதை
துணையானோம்.

பெருமூச்சில் ஈ விரட்டும்
பெருஞ்சத்தம் கேக்காம
கண்ணு ரெண்டும் கலங்குது
ஒன்னத்தான் பாக்காம


நா எங்கபோனாலும்
கூடவே நீ வருவ..
நா ஏங்கித்தான் போனாலும்
நாக்கால நீவிடுவ..

கிழட்டுப்பய சோறுவச்சேன்
சோறோட மோருவச்சேன்
ஆசைதீரகூப்பிடத்தான்..
அழகீனு பேருவச்சேன்.

மனுச காதல் வந்ததா
மதிகெட்டது போலான
ஆண் நாயி தேடிப்போக
எப்ப நீ ஆளான.?

கஞ்சிக்கு வழியில்லா
கிழவனத்திட்டிபுட்டு
எங்கேயும் போனாயோ
எலும்புக்கு ஆசைப்பட்டு

எதுதான் காரணமோ
எனக்கேதும் புரியலையே
அழுதுதான் புலம்புறேன்
அஞ்சறிவு அறியலையே

வாலாட்டி நீ திரிஞ்ச
வயச ஆட்டி நா திரிஞ்சேன்
அழகி ஒன்னக்காணாம
அடியோட நா சரிஞ்சேன்

எனக்குத்தெரியும்.

எஞ்சாவு பாக்கத்
தகிரியம்இல்லாம
ஓடித்தான் நீ போன
ஒருத்தருக்கும் சொல்லாம.

நடுவீடு வரை வந்த நீ
சுடுகாடு வரை வரலையே
அன்ப மறக்கத்தான் இனி
ஆயிசும் இல்லையே..

எழுதியவர் : நிலாகண்ணன் (31-Aug-15, 11:13 am)
பார்வை : 281

மேலே