எங்கெங்கும் அழகு மயம்
அழகு எங்கே இருக்கிறது!
தேடுகிறோம்; வாழ்நாளில்
தேடிக்கொண்டே இருக்கிறோம்;
நம்மைச்சுற்றி இருக்கும்
பொருள்களில் அழகு இருக்கிறது;
நாம் செய்யும்
செயல்களில் அழகு இருக்கிறது;
நாம் அன்றாடம் பார்க்கும்
மனிதர்களில் அழகு இருக்கிறது;
நம்மைச் சுற்றியுள்ள
உயிரினங்களில் அழகு இருக்கிறது;
அனைத்தும் அழகு மயம்!
அதுவே இன்ப மயம்!
நம் ஒவ்வொருவரும்
பார்க்கும் பார்வையில்தான்
அழகின் ரகசியம் ஒளிந்திருக்கிறது;
அழகு என்பது
இறைவனின் கைவண்ணமே;
எங்கெங்கும் அழகு மயம்!
அதுவே இன்ப மயம்!
எங்கெங்கும் அழகு மயம்!
அழகெங்கே இருக்கிறது!
என்றே வாழ்நாளில்
தேடுகிறோம்; நாம்தேடிக்
கொண்டே யிருக்கிறோம்; 1
நம்மைச்சுற் றியிருக்கும்
பொருள்களிளும், நாம்செய்யும்
செயல்களி ளுமழகு
நிறைந்தே இருக்கிறது; 2
நாமன்றா டம்பார்க்கும்
மனிதர் களில்,நம்மைச்
சுற்றியுள்ள உயிரினங்
களிலழகு இருக்கிறது; 3
அனைத்தும் அழகுமயம்!
அதுவே இன்பமயம்!
நாம்ஒவ் வொருவரும்
பார்க்கும் பார்வையில்; 4
தான்அழகின் ரகசியம்
ஒளிந்திருக் கிறது;
அழகென்ப(து) இறைவனின்
எழில்கை வண்ணமே! 5