அவளுக்குள் நான் ……!

இப்போதெல்லாம் அவளை
நினைக்காமல் இருக்க நினைப்பதில்லை.
நினைத்தால் முடிக்க முடிவதில்லை
அவளையே நினைகிறேன்.
என் இதயத்துக்குள் இறங்கி
அகழ்வாராய்ச்சி செய்கிறாள்.
அவள் மட்டுமேஅங்கே ஆலமரமாய் இருக்கின்றாள்.
என்னோடு
உரையாடுவதில் உதிர்ந்து போகும்
அவளின் ஈர இதழ்கள்.
என் சிந்தனைகளின் சிலந்தி வலையெங்கும்
அவள் நினைவுப் பூச்சிகளும்
கனவுக் குழவிகளும் தான்
அவள் கரம் கோர்த்து
மணமேடையில் சிரிக்கவேண்டும்.
ஓர் மழலைக் குழந்தையாய்
அவளை என்
மடியில் நான் கொஞ்சம் கொஞ்ச வேண்டும்.
காலங்களுக்கு அப்பாலும்
காதல் சிட்டுகளாய்
அவளும் நானும் திரிய வேண்டும்.
வட்டத்தின் நுனிதேடித் திரியும்
மூட்டைப் பூச்சிகளாய்,
என் கனவுக்குள்அவள்…!
அவளுக்குள் நான் ……!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 2:58 pm)
பார்வை : 482

புதிய படைப்புகள்

மேலே