தென்றலை வென்றவள்

பேசிடும் இதழ்கள் பேசவில்லை
பூத்தது புன்னகை மவுனங்களே,
பேசிடாக் கண்கள் பேசிடுமே
புரிந்தவர் தெரிந்திடும் காதல்மொழி,
நேசம் கொண்டவர் வரவுகண்டே
நெருங்கிடத் துடிக்கும் இதயமது,
வீசும் தென்றலும் இவளழகில்
விலகிச் சென்றிடும் தனைமறந்தே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Sep-15, 5:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே