அன்பே என் ஆருயிரே

கண்டேன்! கரைந்தேன்!
உன் கண் எய்தும் அம்பினால்...

திளைத்தேன்! தொலைந்தேன்!
உன் அன்பின் அரவனைப்பில்...

பெற்றேன்! மீண்டும் பிறந்தேன்!
உன் காதல் எனை திண்டியதனால்...

தோற்றேன்! தொலைந்தேன்!
உன்னுள் வீழ்ந்ததினால்

திருமண உறவில் இணைந்தோம்
-அக்கணமே,
எக்கணமும் பிரியாவரம் வேன்டுதடி நெஞ்சம்!!

என் வாழ்வின் விடியலே
உன்னை பார்த்தே எழுந்தேன் தினம்!தினம்!

காதல் கலந்த தேனீர் கொடுத்தாயே
உன் இதழ் ருசித்தால் சீனி தேவையில்லையே!!

உன்னை பார்த்த முதல் கணமே
என்னுயிர் எனதில்லையே!!

அன்பே என் ஆருயிரே...!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (12-Sep-15, 11:08 pm)
பார்வை : 513

மேலே