பாத்திரமறிந்து பிச்சையிடு
சேற்றிலாடும் பன்றிகளுக்குச்
சந்தனத்தின் வாசம் தெரியுமா? – அதன்
சிறப்பைச் சொன்னால் புரியுமா?
கோணற்புத்திக் குரங்குகளும்தான்
பூவின் தன்மை அறியுமா? – அதன்
மணமும் மனத்தில் நிறையுமா?
கூக்குரலெழுப்பும் கோட்டான்களைக்
குயிலின் இன்னிசை மயக்குமா? – அந்தக்
கானமும் நாதமாய் ஒலிக்குமா?
பாத்திரமறிந்து பிச்சையிட்டால்
தலைகுனிவு உனக்கு வந்திடுமா?
சொல்லாத் துயராய் மாறிடுமா?