காற்றெல்லாம் என் ஆசை
நான் தினம் தினம்
தியானித்து எழுதும்
கவிதை தொகுப்பே...
நான் முற்றுபெற
முனைகிற போதெல்லாம்
உன் முக கீர்த்தியிலிருந்து
கவிதை மீண்டுமொரு
அத்தியாயமாய் அவதாரமெடுக்கிறது.,
உன்னில் கண்ட அதிசயங்கள்
என் இரசனையில் திகட்டிய
பின்னும்,
என்னை தினமொரு அதிசயத்தால்
திணரடிக்கும் திறமை
உன்னில் மட்டும் எப்படி...
உன் சின்னதொரு மென்புன்னகை
அரை நூற்றாண்டு
கவிதை திறட்டச்செய்யும்...
இவ்வாறு என்
வியப்புகளை விரிவாக்கி
முடிவில்லா கவிதை படைக்க
முயல்கிறேன்....
எனக்கு முடிவொன்றிருப்பதால்
முடிவில்லா என் ஆசை
காற்றில் கவிதைகளாய்
முனகிகொண்டிருக்கிறது....