அவள் விழியெனும் நகைக் கடை

உன்
விழியெனும் நகைக் கடையில்
என்
இதயத்தை அடமானம் வைத்திருந்தேன்.
அதற்கான வட்டியோ
அசலையோ நீ
வாங்கிக் கொள்ளவில்லை
உன்னை நீ
உனக்கு உற்றவனோடு
விற்றுவிட்டாயா? - என்
இதயத்தை என்ன செய்தாய்?
அடமானம் வைத்ததை
அடமானம் வைத்தவனிடம்
தந்துவிடு - இல்லையேல்
உன்னையேத் தந்துவிடு.
உன்னால் நானும்- உன்
உள்ளத்து நகைக் கடைக்கு
உரிமையாளர் ஆவேன்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (30-Sep-15, 5:18 am)
பார்வை : 70

மேலே