​மாமனிதர் திரு ஏ பி ஜே அப்துல் கலாம் ​

​வாழ்ந்தவர் எல்லாம் மாமனிதர் ஆகவில்லை
மறைந்தவர் எல்லாம் வரலாறு ஆகவில்லை !
வாழ்ந்து மறைந்தாலும் நிலைத்து வாழ்கிறார்
மறைந்தும் மனங்களில் நிறைந்து உள்ளார் !

ஏழையே ஆனாலும் ஏற்றத்தின் உச்சமானார்
எளியவர் ஆனாலும் குடியரசு தலைவரானார் !
விண்கலம் கண்டவர் விண்ணுக்கே பறந்தார்
விண்வெளியில் வாழ மண்வெளி துறந்தார் !

அறிவுமிகு சிந்தனையால் சிகரம் அடைந்தார்
அன்புமிகு உள்ளத்தால் உலகையே கவர்ந்தார் !
நாட்டு நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தார்
நாட்டு மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்திட்டார் !

இளைஞர் வாழ்விற்கு இலக்கை வகுத்திட்டார்
இளைய சமுதாயம் மேம்பட வழிகாட்டினார் !
சிந்திடும் புன்னகையால் சிந்திக்க வைத்தார்
சிறப்பான வாழ்விற்கு நல்வழிப் பாதையானார் !

வாய்ப்பும் வசதியும் வாசல்வரை வந்தாலும்
எந்நிலை அடைந்தும் தன்னிலை உயர்த்திட
உள்ளவரை விரும்பாத உன்னத பிறவியவர்
உத்தமரில் உச்சமவர் பண்பில் பகலவனவர் !

நிலைத்த புகழால் நெஞ்சத்தில் நிலைத்திட்டார்
விதைத்த வித்தால் உள்ளத்தில் விருட்சமானார் !
இணையிலா இதயத்தால் இதயத்தில் வாழ்கிறார்
மாசில்லா வாழ்வினால் மாந்தர்க்குப் பாடமானார் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Oct-15, 8:36 am)
பார்வை : 201

மேலே