என் காதலுக்கு உயிர் இருக்கும்

கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில்
யார் கண்டது நீ
கண்ணில் படுயென்று ...?

கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!

வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?
.
கூலிக்கு தேவையா?
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 8:12 pm)
பார்வை : 302

மேலே