தாய் நாடு,தாய்மொழி,பெற்ற தாய்

எனது வீட்டு முற்றத்தில்
குழைந்தை பராயத்தில்
மண்ணலைந்து
விளையாடுகையில்
தாய் வந்து தடுப்பாள்

மண் மீட்பு பணியில்
விதையாக விழ்ந்திடவே
முளையாக வேண்டுமென
தாய் வந்து மண் போட்டுப்போகிறாள்

இந்த பந்தத்தை யார்தான்
பிரித்துவிட முடியும்
எந்த பாசம் அவள்
நேசத்தை வென்றிட முடியுமா ?

கொடிய ஆயுதம் ஏந்தியிருக்கையிலும்
எக்கணமும் அவளை மறந்ததேயில்லை
இக்கணம் வரை தாயின் கண்ணீர் என்னை
நனைத்துக் கொண்டிருக்கின்றது

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (14-Oct-15, 9:41 pm)
பார்வை : 1272

மேலே