பிச்சிப் பூ

தினம் ஒரு
பிச்சிப் பூ
கொடுத்தாய்
அதை காதோர முடிகளிடம்
வைக்க சொன்னாய்
காரணம் கேட்டார்
காதோரம் பிச்சிப் பூ
உறுத்திக்கொண்டே
இருக்குமென்றாய்
உன் நினைவோடு
இன்று பிச்சிப் பூ
தரவில்லை
ஆனாலும்
என் காதோர முடிகள்
உறுத்திக்கொண்டே
இருக்கின்றன காதல் பூ கேட்டு

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 4:32 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 50

மேலே