காணாமல் போனவர்கள் எல்லாம் கல்லறையிலா - கயல்விழி

கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்
வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .

தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .

சீதுவையில் நினைவு தூபியாம்
சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?

கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?
பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?

துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை
சுடு நீரில்
அவித்தீர்களா .?

எம் வினாக்களுக்கு
விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .

நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்
நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.

அண்ணன் தம்பியரே கேளுங்களேன்
எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
கல்லறையில் உறங்குதென்று
சொல்லுங்களேன்.

கொடும் யுத்தத்தால் அழிந்த
உயிர்கள் போக -மிகுதி
கப்பத்தால் அழிவதை பாருங்களேன் .

எழுதியவர் : கயல்விழி (1-Nov-15, 9:44 am)
பார்வை : 676

மேலே