கற்றதும் பெற்றதும்

கற்றதினால் ஆய பயன்
கடவுளின் தாள் தொழல் என்பது
வள்ளுவனின் சிபாரிசு !
கற்றதினால் ஆய பயன்
மற்றவரையும் உற்றாராய் நினை என்பது
பூங்குன்றனின் வழிமொழி !
கற்றதையும் பெற்றதையும்
மற்றவருடன் பகிர்ந்து வாழ் என்பது
கவிஞன் இலட்சியம் !
யார் செய்வது ?
----கவின் சாரலன்