தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று

ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்...
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தை எனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்.


facebook திருட்டு

எழுதியவர் : facebook நண்பர் (10-Nov-15, 1:36 pm)
சேர்த்தது : geetha balasubramanian
பார்வை : 63

மேலே