உடைந்துபோன மிதிவண்டி
உடைந்துபோன
என்
மிதிவண்டி,
நீண்டகாலமாய்
உமிழ்வது
நிசப்தம்
மட்டுமல்ல,
புதைந்த
என்
பால்ய ரகசியங்களை.
சில
வருடங்கள்;
பல
தூரங்கள்.
பாதி பயணத்தில்
உடைந்து,
என்
வீட்டின்
ஒதுக்குபுறத்தை
தனதாக்கியது.
வெங்காயத்திற்கும்
மரவள்ளி கிழங்கிற்கும்
பலமுறை
சிபாரிசு செய்யப்பட்டும்;
என்
பிடிவாதத்தால்,
ஆட்களற்ற
வெறுமையில்,
சுவற்றின்
தோள்களில்
சாய்ந்தபடி,
மௌனமாய்
என்
கதைகளை
வெளியிட்டுகொண்டு
நிற்கிறது,
இன்னும்.
நான்
தலைநகர
வீதிகளில்
பொடிநடையாய்
தூரங்களை
கடக்கையில்,
என்னை
கடக்கும்
மிதிவண்டிகளால்;
தவிக்கிறேன்.
அன்றும்
நடந்துகொண்டிருந்தேன்,
என்னை
படுவேகமாக
கடக்கிறது,
ஒரு
இருசக்கரவாகனம்.......