யார் ஊனம்

கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது...
காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது...
குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது...
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது...
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்...
நீயோ ஊனம் என்கிறாய்...!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (22-Nov-15, 8:28 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : yaar oonam
பார்வை : 159

மேலே