என்னுயிரே சொல்லிடுவாய் === கலித்தாழிசை
உன்கண்கள் பேசுகின்ற ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய்ப் பாங்குடனே உன்னழகில்
கன்னியுந்தன் காதலினால் காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மாறிடுதே என்செய்வேன் சொல்லிடுவாய்
என்னுயிரின் பாதியன்றோ ? என்னுயிரே சொல்லிடுவாய் .