விதை விதைப்போம் வாருங்கள்

நான் சொல்லும் எந்த நல்ல விசயங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவோர் பலர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இன்று அறிவியலால் நிரூபிக்கப் பட்ட அனைத்துமே ஒரு காலத்தில் மதத்தின் பெயரால் நிராகரிக்கப்பட்டது.

உலகம் உருண்டை என்கிற உண்மையை சொன்ன ஒரே காரணத்திற்காக. நீ எவ்வாறு . கிருஸ்துவ மதத்திற்கு எதிராக சொல்லலாம் என்று மன்னிப்பு கேட்க மறுத்த Giordano Bruno வை உயிரோடு. ரோம் நகரில். கத்தோலிக்க கிருஸ்துவ சபை எரித்து கொன்றது.

கலிலியோ மண்டியிட்டு தான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்பதை போல் கேட்டு. வெறும் சிறை தண்டனையோடு தப்பித்து. பின்னர். தனது ஆய்வறிக்கைகளை. தனது சீடர்களின் மூலம். அன்று கருத்து சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்த. ஜெர்மன் நகரிலே கொண்டு சேர்த்தார்.

பின்னர் 500 ஆண்டுகள் கழித்து. அன்று பிரூனோக்கு இழைத்த கொடுமைக்கு கத்தோலிக்க சபை மன்னிப்பு கேட்டது. எந்த இடத்தில பிரூனோவை எரித்து கொன்றார்களோ அதே இடத்தில் பிரூனோக்கு சிலை வைத்து கத்தோலிக்க சபை கௌரவித்தார்கள்.

தர்மம் என்றாவது ஒரு நாள் வென்றே தீரும்.

கலிலியோவிற்கு முன்பே அந்த உண்மையை கண்டு அறிந்தவர் பிரூனோ. கலிலியோவை விட பிரூனோ 16 ஆண்டுகள் மூத்தவர். கலிலியோ பிறந்தது 1564. பிரூனோ பிறந்தது 1548.
ஆனால். கிபி 476 இல் பிறந்த இந்திய விஞ்ஞானி ஆர்யபட்டா. உலகம் உருண்டை என்பதை என்றோ நிரூபித்து விட்டார். அவரை. அன்று பாரத தேசத்தை ஆண்ட மன்னர்கள் கொலையும் செய்யவில்லை. சிறையிலும் அடைக்கவில்லை. அதற்கு மாறாக கௌரவித்தார்கள்.

காரணம். உலகம் தட்டை என்று சதுர் வேதங்கள் சொல்லவில்லை. அதுவும் ஒரு காரணம் என்றாலும். கருத்து சுதந்திரம் என்பது காலம், காலமாக நமது நாட்டில் கொஞ்சும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அனைத்து கலாசாரங்களிலுமே ஏதேனும் சில குறைகள் திருஷ்டி பரிகாரம் போல் இருக்கும். இந்தியாவில் உள்ள திருஷ்டி பரிகாரம். ஜாதி வன்கொடுமை. தமிழகத்தில் மட்டும். தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் கிராமங்களில் 7 ஆயிரம் கிராமங்களில் இன்றும் தீண்டாமை கொடுமை உள்ளது.

பரமக்குடி, முதுகுளத்தூர் போன்ற சில ஊர்களை உதாரணமாக சொல்லலாம். அன்று 16 ஆயிரம் கிராமங்களிலுமே இருந்தது. இன்று 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்தது சற்று மகிழ்ச்சியான செய்தி என்றாலும். இந்த 21 ம் நூற்றாண்டிலும் 7 ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை இருப்பது வேதனை அல்லவா.

தேவர், கௌண்டர், வன்னியர் போன்ற இன மக்கள் அதிகம் உள்ள கிராமங்களில் தான் இந்த கொடுமைகள் நடக்கிறது. நான் அணைத்து தேவர், கௌண்டர், வன்னியர் இன மக்களையும் குற்றம் சொல்லவில்லை.

இன்று அந்த ஜாதியில் உள்ள பல படித்த இளைஞர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க. தனது குடும்பத்தையே எதிர்க்க துணிந்து விட்டார்கள். இதற்கு முன். எதிரே நின்று பேச கூட பயப்பட்ட மக்கள் இன்று எதிர்த்து கேள்வி கேட்க மட்டுமல்ல. போராடவும் துணிந்து விட்டார்கள். அதனால் தான் பரமக்குடி துப்பாக்கி சூடு போன்ற கொடுமைகள் நடந்தது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால். அணைத்து ஆதிக்க ஜாதியினர் செய்யும் கொடுமைகளுக்கும். பிராமணர்கள் இலவச இணைப்பு. நான் பிராமணர்களிலும் அனைவரும் யோக்கியம் என்று சொல்லவில்லை. ஆனால். படையாச்சி, தேவர், கௌண்டர், வன்னியர் அணைத்து ஜாதியினர் செய்யும் தவறுகளின் பழிகளையும் பிராமணர்கள் தலையில் மட்டும் போடுவது என்ன? நியாயம் சாரே.

எனக்கு இறை நம்பிக்கை மட்டுமே உண்டு. நாளை எனது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது. ஜாதி, மத அடையாளங்கள் இன்றி தான் சேர்ப்பேன். எனக்கு பிடித்த சிவனை நான் ஹிந்து என்கிற அடையாளத்தோடு கும்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இறை நம்பிக்கை என்பது ஒருவரின் அபிமானம். ஜாதி, மதங்கள் என்பது அரசியல் கட்சிகள் போல். ஆஸ்திகமும், வசுதேவ குடும்பகா என்கிற சனாதன தர்ம கொள்கையும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். அதே சமயம். ஜாதி, மத அடையாளங்கள் உலகம் முழுவதும் அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்பதே என் விருப்பம்.

வாசு தேவனோ, ஏசு தேவனோ, மகா தேவனோ. ராமோ, ரஹீமோ. உங்களுக்கு என்ன சாமியை பிடித்து இருக்கோ அந்த சாமியை கும்பிடுங்கள். அதற்கு எதற்கு தனியாக ஒரு ஜாதி, மத அடையாளம். அத்தகைய ஜாதி, மத அடையாளங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டால். உலகில் எங்குமே. சண்டை, சச்சரவு, கலவரங்கள், குண்டு வெடிப்புகள் போர் எதுவுமே இருக்காது.

அதற்கு ஆண்டுகள் ஆயிரம் கூட ஆகலாம். ஆனால் அதற்கான விதையை இன்றிலிருந்தே. ஹிந்து இஸ்லாம், கிறிஸ்துவம் என்று அணைத்து மதங்களை சேர்ந்த நடுநிலை வாதிகளும் விதைக்க வேண்டும். அதை பார்க்க நாம் இருக்க மாட்டோம். பரவாயில்லை. பலகோடி ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர்களின் மக்கி போன உடல் தான். இன்று பெட்ரோல், டீசல், மண்எண்னை என்று பயன் படுகிறது.

ஜாதி, மத அடையாளங்கள் இன்றி பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தான் கல்லுரி அட்மிசனில் இருந்து ஆரம்பித்து. அரசாங்க வேலை வாய்ப்பு வரை அனைத்திலும் முன் உரிமை என்கிற சட்டம் வந்தாலே. தானாக. ஜாதி, மத ரீதியிலான இட ஒதுக்கீடு அழிந்து விடும்.

அத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு ஆற்றல் மிகு தலைவர்கள், தலைவிகள் மாநிலங்களிலும், மத்தியிலும் தேவை. ஆனால் இன்றுவரை அத்தகைய ஒரு தலைவரோ, தலைவியோ நமக்கு கிடைக்கவில்லை. அதே சமயம்.

தமிழகத்தில் மட்டுமே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை என்றால். இந்தியா முழுவதும். தமிழகத்தை விட மிகுந்த பின் தங்கிய பீகார், அசாம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத். [குஜராத்தும் தமிழகத்தை விட பின் தங்கிய மாநிலமே] போன்ற மாநிலங்களில் தீண்டாமை எவ்வளவு இருக்கும்.

என்று இந்தியாவில் 100 சதவீதம் தீண்டாமை ஒழிகிறதோ. அன்று தான். பிராமணர்கள் உட்பட அனைத்து Forward Community களும். இட ஒதுக்கீடுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கே தகுதி பெறும்.
_____________________________________________________________
படைப்பு:
- H V கிருஷ்ணப்ரசாத் (முகநூலில்) சித்தர் அறிவியல் Wisdoms of Siddhars

"இந்திய அரசியல் சாசனம் சாதிகளுக்கு அடிப்படையாக 'மனுதர்ம' சாஸ்த்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதை எல்லோரும் முழுமனதோடு நீக்க ஒத்துழைத்தாலே போதும். அதற்கு தமிழ்நாடு மட்டும் போதாது, இந்தியாவின் மற்ற மாநில முற்பட்ட வகுப்பினர் அதற்க்கு ஆதரவு தரவேண்டும். இதை ஒரு இயக்கமாக கட்சி சார்பின்றி, தற்போதைய நிலையில் ஊடகங்கள் ஒன்றிணைத்து பிரசாரம் செய்தால், மக்கள் மனமாற்றத்தால் இது எதிர்காலத்தில் நடக்கலாம் என்று நம்புவோம். "- Singara Naga Rajan

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (28-Nov-15, 11:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 911

சிறந்த கட்டுரைகள்

மேலே