அரிதாரம்
படைப்பு
என்றொரு
அளிப்பு,
அதை
கொடுக்கும்
திறமை உள்ளவர்
வலிந்து பிரசவித்தால் தான்
படைப்புக்கே பெருமை!
அரிதாரம் பூசிக்கொண்டால்
அழகு தெரியலாம்,
அந்த அழகு ரசிக்கப்பட
நளினம்?
தகுதியுள்ளவர்
தரத்துடன்
அளிக்கும்
படைப்பு தான்
மதிப்பு பெறும்!
எல்லாக்கவிதையும்
சிறந்த கவிதை ஆகாது,
எல்லா திரைப்படங்களுமே
வெற்றி பெறுவதில்லை.
உணர்வு கிளர்ந்து
உள்ளம் சுரக்கும்
எண்ண விதைகளை
அடக்கி
வெளிவரும்
படைப்பே
தரம் பெறும்;
அதில் புதுமை,
நடையில் அல்லது கருத்தில்;
கொஞ்சம் அர்த்தம்,
கொஞ்சம் அழகு,
முக்கியமாக எதார்த்தம்,
இன்னும் ஏற்புடைமை
தாங்கி வருவதே
சிறந்த படைப்பு,
அதற்கு மட்டுமே
உரியது,
மதிப்பு.
அங்கீகரிக்கப்படுகையில்
நன்மதிப்பு, விருது!