மாறியும் மாரி வேண்டாம் இதுபோல மழை

மாறியும் மாரி வேண்டாம்
இதுபோல மழை!!
*************************************

அடை மழை
பட்டனத்து வீதிகளை
பல்லாங் குழிகளாக்கி
பரிதவிக்க விட்டுள்ளது
பாதசாரிகளை!!

கன மழை
கடலோரத்து வீதிகளின்
கரை பிரித்து
கலை இழக்கச் செய்துள்ளது
இரக்கமே இல்லாமல்!!

தொடர் மழை
தொடருந்து பயணிக்கும்
தண்டவாளங்களை
சமநிலை பிரித்து
சிதைத்து விட்டுப் போய் இருக்கிறது!!

மாரி மழை
மாறியும் மாரி வேண்டாம்
இதுபோல மழை
கதரியழ வைத்துள்ளது
கண்ணீரை கடலாக்கி!!

கடலாய் நீர் இருந்தும்
குடிக்க சொட்டு நீரில்லை
கடல் போல்சொத்திருந்தும்
ஓர் வாய் உணவில்லை
கையேந்தி உண்ண வைத்துள்ளது!

விந்தை இது
இயற்கை தந்த பாடம் இது
என்றுணர்ந்தால்
என்றுமில்லை
எம்மில் வேறுபாடுமில்லை!!

எழுதியவர் : ஜவ்ஹர் (6-Dec-15, 11:30 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 376

மேலே