மழை - இரண்டு வரிக்கவிதை

மழை - இரண்டு வரிக்கவிதை
--------

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்

|||||||

விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழை நனைவும் அகழாது....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Dec-15, 12:39 pm)
பார்வை : 108

மேலே