காணவில்லை - 2
"டேய் கண்ணுப்பயா.."
"அய்யா... சொல்லுங்கய்யா"
"பாட்டுப் பாடுன சின்ராசப் புடிச்சாரச் சொல்லி ஆளனுப்புனமே என்றா ஆச்சு?"
"சின்ராசு ஊட்ல இல்லீங்களாமா.. அவங்க அப்பாகிட்ட சொல்லீட்டு வந்துட்டாங்களாமா"
"அப்ப அவங்கூட இருந்து கொட்டடிச்ச தன்ராசயாவது புடிச்சார வேண்டியதுதான?"
"அவனூடு எங்கீன்னே தெரீலியாமா... தேடிப்போட்டு வந்துட்டாங்களாமா"
"செரியாப் போச்சு போ... ஊடெங்கீன்னே தெரியாமதான் ஏழு பேரு எட்டா நம்பர் பஸ்ஸ புடிச்சு ஏறீட்டுப் போனானுகளாமா..."