தனிமையில் வாடுகிறேனடி உன்னால் 555
என்னுயிரே...
உன்னை மட்டும் விரும்பி
வரும் என்னை...
நீ ஒதுக்கிசெல்வதில்
சுகம் உனக்கு...
அந்த நிமிடத்தில் என்னை
திட்டிவிடமாட்டாயோ ஏக்கமும் கூடவே...
தென்றல்கூட என்னிடம்
கேள்விகேட்கிறது...
உன் சுவாசத்தை மட்டும்
சுவாசிப்பதால்...
நீ பார்க்காமல் போவதில் கூட
சுகம்தான் பார்க்கமாட்டாயா என்று...
ஏங்கும்போது உனக்காக சிந்தும்
கண்ணீரும் சுகம்தானடி...
உன்னை நினைத்து கனவுவளர்கிறேன்
எல்லாம் போனதடி...
நீ என்னை வெறுத்து
சென்றதால்...
காத்திருந்து உன்னை
காதலித்தேன்...
இன்னும் என்னை
காக்கவைத்தாலும் காத்திருப்பேனடி...
நான் உனக்காக
என்றும்...
முழுவதும் என்னை
வெறுத்துவிட்டேன் என்று சொல்ல...
உனக்கு எப்படி
மனம்வந்ததடி...
உன்னோடு மட்டும்
பேசிக்கொள்ள ஆசைப்பட்டேன்...
இன்றோ தனிமையில்
பேசிகொள்கிறேன் உன்னை நினைத்து.....