வருங்கால இந்திய மேன்மைவணிகம்
அடுத்த 10 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி காணும் நாடாக இந்தியா உயர்வடையும்: ஹாவர்டு ஆய்வில் தகவல்
Ads by Google
ஆண்டுதோறும் 7% வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்படும் இந்தியப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சிப் பொருளாதாரமாக உயர்ந்து சீனாவையும் கடந்து செல்லும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“வரும் பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளது. அதாவது 7% என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சி பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது” என்று ஹார்வர்டு பல்கலைக் கழக பன்னாட்டு வளர்ச்சி மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலை கண்டு ஆண்டுக்கு 4.3% பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும்.
கச்சா எண்ணெய் பொருளாதார நாடுகள் மற்றும் பிற உற்பத்தி/ நுகர்வுப் பொருள் பொருளாதார நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் வேளையில் தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
இந்தியா தனது உற்பத்தித் திறன்களில் முக்கியாமான வளர்ச்சிநிலையை பெற்றுள்ளது. வித்தியாசமான பொருட்கள் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகள் பல்படித்தானதாக மாறும் வாய்ப்புள்ளது. அதாவது மருந்துப்பொருட்கள், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பொருளாதார வளர்ச்சித்துறை பேராசிரியர் ரிகார்டோ ஹாஸ்மேன் கூறும்போது, “சீனா இத்தகைய பொருட்கள் மூலம் தனது தனிநபர் வருவாயை 10 ஆண்டுகளுக்குள்ளாகவே இரட்டிப்பாக்கியுள்ளது. அதே போல் வளர்ச்சியை இந்தியா எட்ட அடுத்த 10 ஆண்டுகளில் வாய்ப்புகள் கூடிவந்துள்ளன” என்று கூறுகிறார்.
2024-ம் ஆண்டு வரை அமெரிக்கப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.8% என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி காணும். பிரிட்டன் 3.2% ஸ்பெயின் 3.4% என்ற விகிதத்தில் வளர்ச்சி காணும்.
2016-ம் ஆண்டு 7.3% மற்றும் 2017-ல் 7.5% என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று ஐநா ஏற்கெனவே கணித்துள்ளது.