அருள் புரிவாய் நீயே

திரையில் பல கதாநாயகன்கள் வந்தாலும்
என் விழித்திரை கண்ட உண்மையான கதாநாயகன் நீ தானே

சிந்தையெங்கும் உந்தன் விந்தை தான் வந்து செல்கிறது
கண் முன்னே கடந்து செல்கிறது
இன்னல் பல வரினும் உன்
இன்முகந்தான் இதழ் சிரிக்குமே
சன்னல் திறந்த காற்றாய்
உன் அன்பு தான் அணைத்திடுமே

வாழ்க்கை இன்னதென்று வரையறை
தந்த என் ஆசானே
என் அன்புத் தந்தையே
இப்பிறவியல்லாது எப்பிறவியிலும்
என் தகப்பனாய் அமைவதற்கு
அருள் புரிவாய் நீயே.

எழுதியவர் : சதீஷ்குமார் (23-Dec-15, 10:35 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 256

மேலே