தூய்மை இந்தியா’ சாத்தியமில்லாதது

‘தூய்மை இந்தியா’ சாத்தியமில்லாதது!
------------------------------
‘தூய்மை இந்தியா’ சாத்தியமில்லாதது!

மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, மத்திய அரசு துவக்கிய, ‘தூய்மை இந்தியா’ திட்டம், வெறும்
அறிவிப்புகளால் மட்டும் வெற்றி அடையாது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது, கடவுளிடம் பக்தி செலுத்துவது போன்றது என, காந்தி கூறினார். எனவே, கழிவுகளை அகற்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது, மக்கள் ஒவ்வொருவரின் ஆன்மாவில் இருந்தும் உருவாக வேண்டும். துஷார் காந்திமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்

மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை!

உ.பி., மாநிலத்தில் இருந்து, பா.ஜ., சார்பில், நிறைய எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு தருவதில்லை. விவசாயிகள் பிரச்னையில், மத்திய அரசு, அரசியல் விளையாட்டு விளையாடுகிறது. ஆனால், உ.பி.,யில் இதற்கு முன் இருந்த அரசுகளை விட, எனது அரசு, விவசாயிகளுக்கு நிறைய செய்துள்ளது.அகிலேஷ் யாதவ்உ.பி., முதல்வர் – சமாஜ்வாதி

கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரிப்பு

ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணைந்து, ஜனதா பரிவார் உருவாக்க முடிவு செய்த பின், பீகார் மற்றும் உ.பி.,யில், கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கயாவில் டாக்டர் தம்பதியர்
சமீபத்தில் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க, லக்னோவில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதிலிருந்தே, பீகார், உ.பி., மாநில கிரிமினல்கள் ஒன்றிணைந்துள்ளதை அறியலாம்.
சுஷில் குமார் மோடிபா.ஜ., மூத்த தலைவர் – பீகார்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (26-Dec-15, 9:28 am)
பார்வை : 2665

மேலே