மழை நேரம் ஒரு மயக்கம்

கொட்டும் மழையில்
கொதிக்கிறது உயிர்
உன்னோடு உறவாட
மேகத்திடம் தூது சொன்னேன்
உன்னை அள்ளிக் கொண்டுவர

உன் வீட்டுச் சாளரங்கள்
திறந்து வை
தென்றல் வர
தென்றலிடமும் தூது சொன்னேன் உன்னை கூட்டி வர

தூவானம் தூவினால்
நினைத்துக் கொள்
அது மேகத்தின் மொழி என்று

மொழி அறியாமல்
நீ தவித்தால்
நீ தலை அசைத்தால் போதும்
மேகத்திற்கு உன் மொழிகள்
புரிந்து விடும்

தேகம் சுடுகிறது
இதயம் பட படக்கிறது
காதலின் மேல் விழுந்து
கொஞ்சம்
காமத்தில் எழுவோம் வா

மழையோடு சேர்ந்து
மழலையாவோம்
மண்ணோடு சேரும் நீர் போல
நீயும் நானும் ஒன்றாவோம்

காதலின் மோதல் வந்து
என்னை தாக்க
விழி இரண்டும் உன்னையே நோக்க
வா காதலியே மேகத்தின்
மேலேறி
கார்மேகம் போகும் முன்னே
சீக்கிரமாய் என் வீடு வந்து சேரு

சந்திரனை தொலைத்த இரவாய்
சூரியனை தொலைத்த பகலாய்
இந்த கொட்டும் மழையில்
நீ இல்லாமல் நான் தவிக்கிறேன்
காதலியே.

காதலோடு காத்திருக்கிறேன்
" ஏனோக் நெஹும்: "

எழுதியவர் : ஏனோக் நெஹும் (5-Jan-16, 10:34 am)
பார்வை : 113

மேலே