வேண்டும் யாவும் உன் உருவில்

கலங்கிய கண்களுக்குள்
கலங்கமில்லா நிலவாகவே
உன் நினைவுகள்...
கண்ணீரின் வழியிலும்
தீராத கடலாகவே!..

முடிவென்ற சொல்லும்
மடிந்தே போனதோ
உன் மீதில் நான் கொண்ட
முடிவி(ல்)லா காதலால்!..

சாலை எங்கிலும்
இடையிடையே நின்று
சற்று திரும்பி பார்ப்பதில்
என் பயணங்களும் நீளுதே,
எங்காவது உன் முகம்
காணும் நப்பாசையில்!..

மாற்றமெல்லாம்
என்னில் தந்தவன் நீதான்,..
மிதக்கிறேன் நான் - உன்
மயக்கிடும் பார்வையில்
வழிந்திடும் காதலால்!

இமைக்கும் நொடிகள் கூட
வீணெனக் கண்டேன்,
எதிரிலே நீ இருக்கையில்...
நாழிகைக்கும் குறைவான
நேரமேனினும் - விரும்பவில்லை,
உன்னை இழக்கவே..!

எனக்கும் வேண்டும்,..
தலைவைத்து தூங்கிட
ஓர் மடி,...
எனக்கும் வேண்டும்
என்னில் உயிராய் இருக்க
ஓர் உறவு,...
எனக்கும் வேண்டும்
அன்பையும் சேர்த்து ஊட்டிட
இரு கைகள்,...
ஆயினும் அத்தனையும்,..
உன் உருவில் மட்டுமே..!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (6-Jan-16, 8:36 pm)
பார்வை : 688

மேலே