மரணம் கூட எனக்கு மயக்கம் தான் உன்னால்

என் சகியே...
அந்த ஒரு நாள் மட்டும்
உருமாறி
சிகண்டி
போல்
வந்துவிடு...
என் சாவை
உன் உருவில்
காண விருப்பமில்லை..

நீ குத்தியது
எனக்கு வலிக்கவில்லை...(வலிக்கப்போவதில்லை...)

நீ தான் குத்தினாய் என்பது
வலிக்கிறது...
(நீ குத்தினாயே என்பதிலேயே இறந்திடுவேன்.
ஆதலால் உருமாறி வா...
நான் சட்டென்று இறந்துவிட்டால் என் உயிரின் வலியை ...
உன்னால் காண முடியாது அல்லவா...
ஆதலால் உருமாறி வா...


உனக்காக இறப்பதும்...
உன்னால் இறப்பதும்...
எனக்கு சந்தோஷமே...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jan-16, 9:21 am)
பார்வை : 205

மேலே