அந்தரங்கம்

அந்தரங்கம் ஊமையானது
அந்தக்காலம்;
நம்மைப்பற்றிய மற்றவர்
எண்ணம் பற்றி
கவலை கொண்ட
நாம்
போகப்போக மாறி விட்டோம்;
என்னைப்போல் தான்
இவனும் அல்லது
நான் எவ்வளவோ
தேவலை என்றானபின்
ஒழிக்க ஒளிக்க
ஏதுமில்லை இங்கே இன்று..!
யாரேனும் நம்மை அணுகி
சொல்லிய ஆறுதல் அன்று
தேம்பி அழுத நமக்கு
வடிகாலானது;
இன்றோ,
அட போடா என்கிறோம்;
என்னடா பொல்லாத வாழ்க்கை என்கிறோம்;
ஹோ, எனக்கென்ன மனக்கவலை என்கிறோம்;
காரணம்,
தன்னம்பிக்கையும்
ரகசியங்களுக்கு
வெளிச்சம் போட்டு நாமே காட்டி
பெருமை கொள்கிறோம்
இன்று..;
உண்மை தானே?