என் வாழ்க்கை

விலங்குகள் கூட வேட்டையாடியதில்லை அதன் இனத்தை
ஆனால் ஆண் வேட்டையாடுகிறான் பெண் இனத்தை

உடுத்திய உடையில் விலகிய துணியை
விழித்து பார்க்கும் ஓநாய்கள் சில .....

ஆணை நம்பி உடன் வந்து நாசமாய்
போன பெண்ணின் வாழ்க்கை பல ....

தந்தையும் தமையனும் போதையில்
தள்ளாடி தாறுமாறாய் போன நாட்கள் சில ....

பேச தெரிந்தும் வீட்டிற்க்குள் ஊமைக்கிளியாய்
வாழ்ந்த நாட்கள் பல .....

உயிர் வாழ உணவில்லாமல் வீட்டிற்க்குள்
ஒடுங்கி வாழ்ந்த நாட்கள் சில ...

ஊராரிடம் உதவி கேட்க கெளரவம்
தடுத்த நாட்கள் பல ......

வெயிலில் வியர்வை மறைய வீட்டில் விசிறி இல்லை
மழையில் பிடிக்க வீட்டிற்கே குடையில்லை ...

கடன் கேட்டால்
காலையிலே கடனா...
கையில காசு இல்ல ..
பொழுது போய் தரமாட்டேன்
என ஆயிரம் பொய்யுரை ...

உலகம் அறியாதவள் நான்
உண்மையான பாசமும் அறியாதவள் நான்

உலகமே எனக்கு தந்த துன்பத்தில்
ஒருவன் மட்டும் என்னுடன் இருந்தான்
என் கண்ணீரை துடைத்து
கவலையை மறக்க செய்தான்
வாய்க்குள் புலம்பிய நான்
வாய்விட்டு சிரித்தேன்
பசி கூட அவன் பாசத்தில் பறந்து போனது
அவன் அன்பில் மெல்ல என் இதய கதவு திறந்தது
துடைக்க உடனே வருவான் என் கண்ணீரை
ஹச் என தும்மினால் 1000 முறை விசாரிப்பான்

பிடித்ததால் மணக்கலாம் என்றேன்
துன்பத்தில் உதவாத மற்றவர்கள் மதி
வேகமாக சொல்கிறது அவன் வேறு ஜாதி
------------- அதனால் ----------
என் வாழ்க்கை கேள்வி குறி ?

எழுதியவர் : கார்த்திகா (13-Jan-16, 4:09 pm)
பார்வை : 102

மேலே