பொங்கல் தை திரு நாள்
மூடுபனி மார்கழியில் முடங்கியவை கழிந்திடவே
உழவர் புத்தாண்டில் புதிய விடியலில் புதியதை காண
ஆதவனின் ஆசியுடன் ஆனிரைகள் ஆதரவுடன்
பூ மகளின் மணி வயிறு வாய்த்த நெல் மணிகள்
கற்கண்டு சுவையுடன் ஓங்கி நிற்கும் கரும்பும்
அகிலம் ஆளும் ஆதித்தன் அடி போற்றி
கற்கண்டு ஆவின்பால் நுதம்பும் கரும்பும்
நில மகளே பொங்கும் நேயத்துடன் நிவேதிக்கும் திருநாள் .