காதல் பார்வை ---- வஞ்சித் தாழிசை

மதிமுகம் சிவந்திடும்
பதியெனை நினைத்திடும் .
கதியெனக் கனவிலும்
விதிவழி விரைந்திடும் .


கவிமகள் வருகையில்
செவிவழி உரைக்கையில்
புவிதனில் புணர்ச்சியும்
நவில்தொறும் விரைந்திடும் .


சிரிப்பொலிச் சிணுங்கிட
உரிப்பொருள் உணர்த்திட
விரித்திடும் மலர்களும்
விரைவினில் விரைந்திடும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Feb-16, 1:40 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 76

மேலே