காதல் பார்வை ---- வஞ்சித் தாழிசை
மதிமுகம் சிவந்திடும்
பதியெனை நினைத்திடும் .
கதியெனக் கனவிலும்
விதிவழி விரைந்திடும் .
கவிமகள் வருகையில்
செவிவழி உரைக்கையில்
புவிதனில் புணர்ச்சியும்
நவில்தொறும் விரைந்திடும் .
சிரிப்பொலிச் சிணுங்கிட
உரிப்பொருள் உணர்த்திட
விரித்திடும் மலர்களும்
விரைவினில் விரைந்திடும் .