தனிமையின் பயணம்...

உன் அருகாமையின்,
மீளாக் கணங்களின் நினைவோடையில்-
தாகம் தணித்தவாறே...

பாலை வெளியில்,
பிரியா வெப்பம் படர்ந்த,
வீசும் காற்றின்,
ஸ்பரிசங்களினூடே...
பயணித்துக் கொண்டேயிருக்கிறேன்...

பாதையறியாமல்...
இலக்கில்லாமல்...

எழுதியவர் : ரமண பாரதி (14-Jun-11, 7:28 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 418

மேலே