தாயாய்
இனிய கவிதையின்
படைப்பு ஒரு
பிரசவ சாதனைதான்..
கடவுளின் வேலை
நடைபெறுகிறது அங்கே-
கருவை உருவாக்கி
கை கால்கள் கொடுத்து,
உலவிட
உயிர் கொடுக்கும்
ஒப்பற்ற வேலை..
அச்சில் ஏறி,
அடுத்தவர் எடுத்து
உச்சி முகர்ந்து,
படைத்தவனைப்
பலரறியச் செய்யும்போது,
பாரறிய
பூரணமாய்த் தாயாகிறான்-
கவிஞன்...!