தாயாய்

இனிய கவிதையின்
படைப்பு ஒரு
பிரசவ சாதனைதான்..

கடவுளின் வேலை
நடைபெறுகிறது அங்கே-
கருவை உருவாக்கி
கை கால்கள் கொடுத்து,
உலவிட
உயிர் கொடுக்கும்
ஒப்பற்ற வேலை..

அச்சில் ஏறி,
அடுத்தவர் எடுத்து
உச்சி முகர்ந்து,
படைத்தவனைப்
பலரறியச் செய்யும்போது,
பாரறிய
பூரணமாய்த் தாயாகிறான்-
கவிஞன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Feb-16, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : THAAYAAI
பார்வை : 111

மேலே