மெல்லிசை நீ
அன்பெனும் மலர் சொரிந்து
ஆதரவாய் நிழல் தரும்
அழகிய விருட்சம் நீ
*****
நினைவெனும் கடலில்கலந்த பின்னும்
நீங்காமல்ஓடிக் கொண்டிருக்கும்
அதிசய நதி நீ
*****
ஒளியெனும் மொழியால்
உணர்வினை உயிர்ப்பூட்டும்
வான் நிலவு நீ
*****
உயிரின்ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
ஒற்றைப் பனித் துளி நீ
*****
கீற்றின் மௌன அசைவை
மொழி பெயர்க்கும்
தென்றல்காற்று நீ
******
நடந்து போகும் திசையெங்கும்
நிரம்பி வழியும் நீங்காத
மெல்லிசையாய் என்றும் நீ...
*******