அனைத்திந்திய காதலர் கூட்டைப்பின் அறிவிப்பு

அனைத்திந்திய காதலர் கூட்டமைப்பு இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.. காதலர்களுக்கு இந்நாள் பொன்னான நாள், புனிதமான நாள். இந்தியாவில் சில ஊர்களில் இந்த புனிதமான நாளை இழிவு செய்யும் வகையில் காதல்மீது பகையுணர்வு கொண்டவர்கள் நாய்கள் பூனைகள் எலிகள் கழுதைகளுக்கெல்லாம் திருமணம் செய்துவைப்பதாக காணொலி ஊடகங்கள் மூலம் அறிகிறோம். அந்தக் கெடுமதியாளருக்கு கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை செய்து மன்னித்து விடுகிறோம். இனிமேலும் புனிதமான காதல் தினத்தையும் காதலர்களையும் யாரேனும் இழிவு படுத்தினால் அவர்கள் மீது மான நஷ்ட வழக்குப் தொடரப்படும் என்று இந்த அறிவிப்பின் மூலம் தெரவித்துக்கொள்கிறோம்.


காதல் களஞ்சிய ராஜன்
தலைவர்
அனைத்திந்திய காதலர் கூட்டமைப்பு
புது தில்லி

எழுதியவர் : மலர் (14-Feb-16, 3:30 pm)
பார்வை : 127

மேலே