மனம் மகிழும் திருவிழா

மாரியம்மன் திருவிழா கடைகள்


திண்டுக்கலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பே கடைகள், வித விதமான ராட்டினங்கள் என அனைத்தும் இடம்பெற்று விடும் . இவை திருவிழா முடிந்த பின்னரும் 1 மாதம் வரை இருக்கும் .திண்டுக்கல் மக்களுக்கு இந்த திருவிழா பக்தியோடு பொழுதுபோக்கு அம்சத்தையும் தருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை வந்து விட்டால் கூட்டம் அலைமோதும் . எல்லா மதத்தினரும் இங்கு வந்து செல்வர் . சுற்றிலுமுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு குழுவாக வருவர். இவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு கோவில் மைதானத்திலேயே தங்கி சாப்பிட்டு விட்டு இரவு முழுவதும் அங்கே நடக்கும் வேடிக்கைகளை கண்டுகளித்தபடி இருந்து விட்டு காலையில் செல்வர். பெரும்பாலும் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் போது இந்த கூட்டம் அதிகம் இருக்கும்.

ராட்டினங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகள் கோவில் உள் மைதானத்திலும், கோவிலுக்கு பின்புற வெளி மைதானத்திலும் அமைகப்பட்டிருக்கும் .

இக்கோவிலில் காலையில் கோவில் கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவோரும்,பால் குடம் எடுப்போரும் அதிகம் இருப்பர் .ஆனால் காலையை விட மாலை வேளைகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகம் காணப்படுவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப சுவாமி தரிசனம் செய்து விட்டு அப்பளம், பானி பூரி, ஐஸ் க்ரீம் என வாங்கி உண்டு விட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதும் , ராட்டினத்தில் ஏறுவதுமாக பொழுது நகரும்.

எழுதியவர் : நேத்ரா (23-Feb-16, 4:13 pm)
சேர்த்தது : நேத்ரா
பார்வை : 2685

மேலே