ஆடும் மயில்

பருவ மழையோ " பதுமை இவளோ,
தேகம் நனைய "தோகை விரித்து,
ஆடும் மயிலோ!

தேவன் மகளோ" இவளை தேடி வருதோ!
வான மழையே "இவள் பாதம் தழுவ!

மேகமழையே உனக்கு நாணம் இல்லையோ - நீ
மோகம் கொண்டுதான் "இளங்கன்னி இவள்
தேகம் தொட்டியோ !

அவள் பூந்தளிர் பூவுடல் மேவிட
நீரும் கானல் ஆகுமோ -இல்லை
தேகம் தழுவும் "காமன் கரம் என,
தேகம் குளிர்ந்து தென்றலாகுமோ!,,,,,,

எழுதியவர் : ராஜா (25-Feb-16, 7:58 pm)
Tanglish : adum mayil
பார்வை : 246

மேலே